ஆதிபராசக்தி அகிலாண்டேஸ்வரி
அம்மா அம்மா அருள்புரிவாய் ।
ஜோதி சொரூபிணி தாண்டவ மோகினி
ஆதிஅந்தம் இல்லா அருட்பெரும்ஜோதி ॥
சிந்தனை தெளியும் சிதானந்த நிலையும்
சேவை செய்யும் மனமும் தந்தருள்வாய் ।
அம்பலத்திறைவனின் ஆனந்த நாயகியே
அக கமலத்தில் எழுந்தருள்வாய் தாயே ॥