தேவி உன் பெயரை

தேவி உன் பெயரை துர்க்கா ஸ்ரீதுர்க்கா

என்று நான் ஓதியவண்ணம்

ஆவியை விடுத்தால் ஏழையேன் என்னை

அணுகுமோ தீவினைக் கூட்டம்?

பாவமே நிறைந்த பாதகன் எனினும்

பைரவி, நின்திருப் பாதம்

மேவுவேன்; பிறவித்தளை மாற்றி

விடுதலை நல்குவாய் அன்றோ?

நின்னருட் பெயரின் உறுதியினாலே

நிந்தையும் கவலையும் நீங்கி

மன்னிய பிரம்ம பதத்தையும் அடையும்

வாய்ப்பினைப் பெற்று நான் உய்வேன்.

–‘அமுத மொழிகள்’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top