மனமே சொர்க்க இன்பத்தை
வழங்கும் அமுதை அருந்திடுவாய் !
இனிதே ஹரி ஹரி என்றபடி
அழுது தரைமேல் உருண்டிடுவாய் !
ஆழ்ந்த சிம்ம நாதம் போல
அமையும் ஹரிகோஷம்
சூழ்ந்து வான வெளியெல்லாமும்
நிரம்பிடும் ஹரி நாமம் ! (மனமே)
கைகள் தூக்கி நடமாடிக்
கானம் பாடி ஹரிநாமம்
வையக மாந்தர் யாவர்க்கும் வாரி
வழங்கி மகிழ் வுறுவாய் ! (மனமே)
ஹரியின் அன்புப் பெருங்கடலில் நீ
அல்லும் பகலும் நீந்திடுவாய் !
ஹரியின் பெயரால் ஆசைகள்
அழித்து வாழ்வில் இன்புறுவாய் ! (மனமே)
பிரேமைப் பித்தனாகி ஹரிஹரி
என்று ஏங்கி அழுதிடுவாய்
பரவசப் பித்தனாகி ஹரிஹரி
என்று ஏங்கி அழுதிடுவாய் !
–அமுதமொழிகள்