கீரவாணி–த்ரிதாள்
மனமே நீயும் ஹரியை துதிக்க
மறந்திட வேண்டாம்!
யாகயக்ஞம் தேவைதானோ
யோகி முனிவர் ஆதல் வேண்டுமோ?
நாரதர் போற்றிடும் நாதனை தினமே
கூடி பஜனை செய்தாலே!
ஹரியின் ஸ்மரணம் செய்த கணமே
கொடிய துயரங்கள் தொலைந்து போகுமே
பரமபுருஷன் ஸ்ரீ புரந்தர
விட்டலராயன் அருளாலே!