மலரின் மேவு

மலரின் மேவு திருவே – உன்மேல்

மையல் பொங்கி நின்றேன்

நிலவு செய்யும் முகமும் – காண்பார்

நினை வழிக்கும் விழியும்

கலகலென்ற மொழியும் – தெய்வ

களி துலங்கு நகையும்

இலகு செல்வ வடிவும் கண்டுன்

இன்பம் வேண்டுகின்றேன்

கமலமேவும் திருவே நின்மேல்

காதலாகி நின்றேன்

குமரி நின்னை இங்கே பெற்றோர்

கோடி இன்பமுற்றார்

அமரர் போல வாழ்வேன் – என்மேல்

அன்பு கொள்வையாயின்

இமய வெற்பின் மோத – நின்மேல்

இசைகள் பாடி வாழ்வேன் 

–பாரதியார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top