அன்பெனும் பிடியுள் அகப்படும்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும் வலைக்குள் படுபரம்பொருளே

அன்பெனும் கரத் தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிரொளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

அன்புருவாம் பர சிவமே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top