பாலும் தேனும்

பாலும் தேனும் பாகும் பருப்பும்

நாலும் கலந்து நான் தருவேன் ।

உன் கோயில் வருவேன் ஆடல் புனைவேன்

குறைகளை தீர்ப்பாய் கணபதியே ॥

பேழை வயிரும் பிறைப்போல் கோடும்

யானை முகமும் உடையவனே ।

உன் பாத சிலம்பின் நாதம் கொண்டு

வேதம் பயில்வோம் வித்தகனே ॥

அன்னை பிதாவை முன்னறி தெய்வம்

அறிந்திட செய்வாய் அரும்பொருளே ।

உன் ஞானப்பழத்தை நாங்கள் புசிக்க

தானம் தருவாய் ஐங்கரனே ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top