அருட் சோதித் தெய்வமெனை

அருட் சோதித் தெய்வமெனை

ஆண்டு கொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற

ஆனந்த தெய்வம்

பொருட்சாரும் மறைகளெல்லாம்

போற்றுகின்ற தெய்வம்

போதாந்த தெய்வமுயர்

நாதாந்த தெய்வம் ॥

இருட் பாடு நீக்கியொளி

ஈந்தருளும் தெய்வம்

எண்ணிய நானெண்ணியவாறு

எமக்கருளும் தெய்வம்

தெருட் பாடலு வந்தெனையும்

சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற

தெய்வமதே தெய்வம் ॥

தாயாகி தந்தையுமாய்த்

தாங்குகின்ற தெய்வம்

தன்னை நிகர் இல்லாததனித்

தலைமை தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர்

மனத்தமர்ந்ததெய்வம்

மலரடியென் சென்னிமிசை

வைத்த பெரும் தெய்வம் ॥

காயாது கனியாகிக்

கலந்தினிக்கும் தெய்வம்

கருணை நிதித்தெய்வ

முற்றுங்காட்டுவிக்கும் தெய்வம்

சேயாக எனை வளர்க்கும்

தெய்வம் மகாதெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற

தெய்வமதே தெய்வம் ॥ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top